கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 42 வயது நபரைக் கண்டுபிடிக்க ஆக்லாந்து காவல்துறை பொதுமக்களிடம் உதவி கோருகிறது.

Matthew Dodds என்ற குறித்த நபர் Waitemataa என்றும் அறியப்படுகிறார். இவர் Tämaki Makaurau முழுவதும் தொடர்புகளை கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் அவர் ஆபத்தானவராகக் கருதப்படுகிறார் என்றும் அவரை பொதுமக்கள் அணுகக்கூடாது எனவும் பொலிஸார் எச்சரித்தனர்.

இந்நிலையில் அந்த நபரை பார்ப்பவர்கள் உடனடியாக 111 என்ற எண்ணை அழைக்குமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.