ஆக்லாந்தில் அதிகாலையில் இடம்பெற்ற இரண்டு கொள்ளை சம்பவங்களை அடுத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதல் சம்பவம் Takapuna வில் உள்ள Lake வீதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கடைக்குள் நுழைவதற்கு வாகனம் ஒன்று பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று குற்றவாளிகள் கடைக்குள் நுழைந்து Vape பொருட்கள் மற்றும் Vape திரவங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வேறு வாகனத்தில் வெளியேறியுள்ளனர்.

காவல்துறையினர் ஹெலிகாப்டர் உதவியுடன், அந்த வாகனம் மாநில நெடுஞ்சாலை 18 இல் செல்வதைக் கவனித்தனர்.

சிறிது நேரத்தில் வாகனம்‌ மடக்கிப் பிடிக்கப்பட்டு ஸ்பைக் 
மூன்று குற்றவாளிகளை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அதிகாலை 3 மணிக்கு, Ōtaraவில் உள்ள Bairds வீதியில் ஒரு கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கடைக்குள் நுழைவதற்கு ஒரு வாகனம் பயன்படுத்தப்பட்டது. குற்றவாளிகள் சம்பவ இடத்திலிருந்து வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

பின்னர் அந்த வாவாகனம் ஒரு இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது.
 
மேலும் இரண்டு இளைஞர்கள் ஒரு வீட்டிற்குள் ஓடுவதைக் கண்டனர்.  இந்நிலையில் ஒருவரை கைது செய்த பொலிஸார் இரண்டாவது நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.