ஆர்யாவும், கௌதம் கார்த்திக்கும் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தை மனு ஆனந்த் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே விஷ்ணு விஷால் நடித்து வரவேற்பை பெற்ற எப்.ஐ.ஆர் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்கு 'மிஸ்டர் எக்ஸ்' என்று பெயர் வைத்துள்ளனர். ஆர்யாவுக்கு வில்லனாக கௌதம் கார்த்திக் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நிறைய கதாநாயகர்கள் வில்லன்களாக நடித்து வருகிறார்கள். தற்போது கௌதம் கார்த்திக்கும் வில்லனாகிறார்.

இந்த படம் அதிரடி, திரில்லர் கதையம்சம் கொண்டதாக உருவாகிறது.

மேலும் படத்தில் இடம்பெறும் இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.