அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக இயக்கியுள்ளார் மணிரத்னம்.

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியானது.

அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தை வடபழனியில் உள்ள பளாஸோ திரையரங்கில் நடிகர் விக்ரம் ரசிகர்களுடன் பார்த்து ரசித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நடிகர் விக்ரம் ரசிகர்களுடன் புகைப்படங்களைப் எடுத்துக் கொண்டார்.

மேலும் சீயான் விக்ரம் உடன் நடிகர் ஜெயராமும் பொன்னியின் செல்வன் 2 படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார்.

ஆழ்வார்கடியான் கேரக்டரில் நடித்துள்ள ஜெயராம் உடனும் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இதனால் சில மணி நேரங்களுக்கு பளாஸோ திரையரங்கம் பரபரப்பாக காணப்பட்டது.