Wairarapa வின் மிகப்பெரிய நகரமான Masterton இல் ஒரு வீட்டில் இருந்து 100,000 டொலர்கள் மதிப்புள்ள திருட்டுப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் இடம்பெற்ற தொடர் திருட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது திருடப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த நடவடிக்கையின் போது 45 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மெத்தாம்பேட்டமைன் வைத்திருந்ததாகவும், காவல்துறையை எதிர்த்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

குற்றவாளிகளை கைது செய்ய நாங்கள் கடினமாக உழைக்கிறோம் என்பதை இந்த அதிரடி நடவடிக்கை சமூகத்திற்கு உறுதியளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என டிடெக்டிவ் கோரி ரீட் கூறினார்.