இன்று பிற்பகல் வைகாடோவில் உள்ள Hangatiki இற்கு அருகே மாநில நெடுஞ்சாலை 3 இல் இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் நான்கு பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்திற்கு மதியம் 12.45 மணியளவில் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டன.

தீவிர விபத்து பிரிவு சம்பவ இடத்தை ஆய்வு செய்யும் போது சாலை சில மணி நேரம் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முடிந்தால் வாகன ஓட்டிகள் அப்பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.