ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அனைத்து போர்கள், மற்றும் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பணியாற்றி இறந்த ஆஸ்திரேலியர்கள் மற்றும் நியூசிலாந்து நாட்டினரின் சேவையையும் பங்களிப்பையும் பரந்த அளவில் நினைவுகூரும் Anzac தேசிய நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.

அந்தவகையில் வகையில் ஏப்ரல் 25 ஆம் திகதியான இன்று முந்தைய போர்கள் மற்றும் மோதல்களில் பணியாற்றியவர்களையும், அதில் உயிரிழந்தவர்களையும் நினைவுகூருவதற்காக நியூசிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் அன்சாக் தின நிகழ்வுகளில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

ஆக்லாந்து, வெலிங்டன் மற்றும் 
Christchurch ஆகிய இடங்களில் பெரிய அளவிலான நினைவுகூறல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அதே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள பல நகரங்கள் மற்றும் நகரங்களிலும் நினைவு கூறும் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிலையில் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தனது சொந்த ஊரான Upper Hutt இல் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டார்.