ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த டீன் ஏஜ் சிறுவன், திடிரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், சிறுவன் மீண்டும் உயிர் பிழைத்தது அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

16 வயதான சம்மி பெர்கோ (Sammy Berko) என்ற சிறுவன் தனது குடியிருப்புக்கு அருகே இருந்த ஜிம்மில் ராக் கிளைம்பிங் என்ற வகையான உடற்பயிற்சி செய்து வந்துள்ளார்.

அப்போது திடிரேன மாரடைப்பு ஏற்பட்டதால், ஜிம் ஊழியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து மாரடைப்புக்கு வழங்கப்படும் CPR சிகிச்சையை இடைவிடாமல் மருத்துவர்கள் வழங்கினர். இருப்பினும் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், பெர்கோ இறந்துவிட்டதாக சிறுவனின் தாய் ஜெனிஃபர் பெர்கோவிடன் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதைக் கேட்டு உடைந்துபோன பெற்றோர்கள், சிறுவனின் உடலின் அருகில் சென்று உட்கார்ந்து, உடைந்த மனதுடன் சிறுவனது ஆன்மாவை வழியனுப்பி கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் இறந்ததாக கூறப்பட்டு 2 மணி நேரங்களுக்கு பிறகு சிறுவனின் உடல் அசைவதை கண்டு ஆச்சரியமடைந்த பெற்றோர், உடனே மருத்துவர்களை அணுகியபோது மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

அறிவியல் முறைப்படி இறந்து போனதாக அறிவிக்கப்பட்டவர், மீண்டும் உயிர்த்தெழுந்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வைபோல் இதற்கு முன்பும், எப்போது தாங்கள் பார்த்ததில்லை, இது ஒரு அதிசயம் தான் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பெர்கோவின் இதயத்துடிப்பை மீண்டும் கேட்டபோது, எனக்கு சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. எனது வாழ்க்கையில் நிகழ்ந்த மிகப்பெரிய உணர்வுப்பூர்வமான மகிழ்ச்சியான சம்பவம் இது என தாய் ஜெனிஃபர் பெர்கோ தெரிவித்தார்.