இன்று காலை Tauranga துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பனாமாவில் இருந்து சிட்னி நோக்கிச் சென்ற சரக்குக் கப்பலில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் விசாரணைகள் தொடரும் போது சுங்கத் துறை மேலதிக கருத்துக்களை தெரிவிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது.