ஆக்லாந்து மிருகக்காட்சிசாலையில் உள்ள காண்டாமிருகங்கள் வாழும் பகுதியில் இன்று நபர் ஒருவர் நுழைந்து நீராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் நீராடி நீச்சல் அடித்த வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த நபர் பல நிமிடங்கள் தண்ணீரில் தங்கியிருந்ததாகவும் மற்றும் நீரை விட்டு வெளியேறுமாறும் ஊழியர்கள் அறிவுறுத்தியதாக ஆக்லாந்து மிருகக்காட்சிசாலை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் ஊடுருவிய குறித்த நபரால் காண்டாமிருகங்கள் திடுக்கிட்டன என்றும், அவை அங்கிருந்து வேகமாக நகர்ந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் மனிதர்களோ, விலங்குகளோ காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.