ஆக்லாந்தின் மனுகாவ் பகுதியில் போதை பொருள் பயன்பாடு பற்றி பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து நகர காவல் துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று அதிரடி சோதனையிட்டு உள்ளனர்.

இதில், மெத்தம்பிடமைன் போதை பொருளை பீர் கேன்களில் அதிக அளவில் மறைத்து வைத்து இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து இந்த குற்றச் செயலுடன் தொடர்புடைய பல்தேஜ் சிங் என்ற நபரை பொலிஸார் கைது செய்தனர். 

அவரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த நபர் இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திரா காந்திக்கு பாதுகாவலராக இருந்த சத்வந்த் சிங் என்பவரின் மருமகன் இந்த பல்தேஜ் சிங் என்பது தெரிய வந்துள்ளது.

சத்வந்த் சிங் மற்றும் மற்றொரு பாதுகாவலரான பியாந்த் சிங் ஆகிய இருவரும் இந்திரா காந்தியின் மெய்க்காப்பாளராக இருந்து வந்தனர்.

விசுவாசத்திற்கு பெயர் போன அவர்கள், பாதுகாப்பு பணியில் இருந்தபோதே நாட்டின் பிரதமராக இருந்த, இந்திரா காந்தியை உடல் முழுவதும் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.