Tauranga வில் ஒரு வணிக நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தின் போது கடை ஊழியரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 8 ஆம் திகதி பிற்பகல் 3.30 மணியளவில் Tauranga வில் உள்ள Cameron சாலையில் அமைந்துள்ள குறித்த வணிக வளாகத்தில் இந்த மோசமான கொள்ளை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொருட்களைத் திருடிவிட்டு தப்பிச் செல்வதற்கு முன் ஒரு நபர் ஆயுதத்தை எடுத்து ஊழியரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் அந்த ஊழியர் படுகாயம் அடைந்தார்.

இது தொடர்பிலான விசாரணையைத் தொடர்ந்து, 34 வயது நபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் நாளை Tauranga மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.