கடந்த மூன்று வாரங்களாக Canterbury இல் நடந்த பல மோசமான கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 50 வயதுடைய குறித்த நபர் நேற்று Woodend பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருட்டில் ஈடுபட்ட போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் இன்று Christchurch மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைக்கு உதவிய தகவலை வழங்கிய அனைவருக்கும் காவல்துறை நன்றி தெரிவித்ததுடன், இந்த கைது சிறு வணிகங்களுக்கு சில உறுதியளிக்கும் என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளது.