ஐ.பி.எல். தொடரின் நேற்றைய 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. சென்னை அணியின் கேப்டன் டோனிக்கு இந்த ஆட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இந்த போட்டி சென்னை அணியின் கேப்டனாக தோனிக்கு 200-வது போட்டியாகும்‌

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தைக் காண ரசிகர்கள் அதிக அளவில் குவிந்தனர். இந்த ஆட்டத்தைக் காண திரை பிரபலங்களும் வருகை தந்தனர்.

இந்நிலையில் நடிகை த்ரிஷாவும், சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்தார். மேலும் நடிகர் சதீஷ், நடிகை பிந்து மாதவி, டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்டோர் ஆட்டத்தை நேரில் காண வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.