இந்தியா: தமிழ்நாடு

தமிழ் மொழி மீது இந்தி உள்ளிட்ட எந்த ஒரு மொழியையும் திணித்துவிட முடியாது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் பனராஸ் பல்கலைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடலில் பேசிய ஆளுநர் ரவி பேசுகையில் இது தொடர்பில் கூறுகையில், இந்தி மொழியைவிட தமிழ் மொழிதான் பழமையானது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழ் மொழிக்கு நிகரான பழமையான மொழி. தமிழ் மொழி மீது இந்தி உள்ளிட்ட எந்த ஒரு மொழியையும் திணிக்க முடியாது என கூறியுள்ளார்.