ஆக்லாந்தில் Aylesbury தெருவில் உள்ள Pakuranga Plaza ஷாப்பிங் சென்டர் நேற்றைய தினம் இரவு கொள்ளையர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது‌.

வாகனத்தை பயன்படுத்தி ஷாப்பிங் சென்டர் உடைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 11:50 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஷாப்பிங் சென்டருக்குள் இருந்த நகைக்கடையை அடித்து உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்டவர்கள் பல பெருமதி மிக்க பல பொருட்களை எடுத்துக் கொண்டு வாகனத்தை சம்பவ இடத்தில் விட்டுவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பொலிசார் இந்த குற்றச் செயலுக்கு பொறுப்பானவர்களைக் கண்டுபிடிப்பதில் உறுதியுடன் உள்ளனர், மேலும் எங்கள் விசாரணைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.