நியூசிலாந்து

நேற்றைய தினம் Canterbury இன் Rangiora என்ற பகுதியில் உள்ள ஒரு வங்கியில் இடம்பெற்ற கொள்ளை‌ சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

நேற்று மாலை 4.10 மணியளவில் High தெருவில் அமைந்துள்ள குறித்த வங்கியில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

வங்கியில் கொள்ளையடித்த நபர் ஆயுதங்களுடன் இருந்ததாகவும், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார் அந்த நபரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.