இலங்கை

கடவுச்சீட்டுக்களைப் பெற முன்பதிவு செய்து நாளை (12) நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டவர்கள் நண்பகல் 12 மணிக்கு முன்னதாக தமது விண்ணப்பங்களை கையளிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு 13 மற்றும் 14ஆம் திகதி அரச விடுமுறை என்பதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.