மராட்டியத்தில் மும்பை காவல் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு 9 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் தன்னை ராக்கி பாய் என அறிமுகப்படுத்தி கொண்டு, ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் இருந்து பேசுகிறேன் என கூறியுள்ளார்

அதன்பின், வருகிற 30 ஆம் திகதி நடிகர் சல்மான் கான் கொலை செய்யப்படுவார் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து பரபரப்படைந்த மும்பை போலீசார், தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.

இந்தி நடிகர் சல்மான்கான் மும்பை பாந்திரா பகுதியில் வசித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து, நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.