அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அவை ரிக்டர் அளவில் 3.9 மற்றும் 4.6 ஆக பதிவானது.

அதிகாலை 2.26 மணி அளவில் கேம்பெல் பே என்ற இடத்திலிருந்து 220 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்று ஒரே நாளில் நான்கு முறை நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நேற்று நான்கு முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 5.5‌ ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.