ஆக்லாந்தின் Hauraki Gulf இல் மோசமான வானிலை காரணமாக படகு ஒன்று பாறை மீது மோதுண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதனையடுத்து குறித்த படகில் பயணித்த மூன்று பேர் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்‌

நேற்று இரவு இரவு 9 மணியளவில் Rakino அருகிலுள்ள தெற்கு தீவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆக்லாந்து வெஸ்ட்பேக் மீட்பு ஹெலிகாப்டர் குழுவினர், சவாலான நிலையில் படகில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, மற்ற இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது என கூறப்பட்டுள்ளது.