இந்தியா: தமிழ்நாடு

ரூ.2,467 கோடி புதிய விமான நிலைய முனையம் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்.

அவர் வருகையையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் சந்திக்க நேரம் கேட்டு இருந்தனர். 

இந்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவருக்குமே நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியை அவர் சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும். அதேவேளையில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வமும் பங்கேற்க இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.