கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த ஒரு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணி முதல் 7:50 மணி வரை இந்த தாக்குதல் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் Linwood Avenue விற்கு விரைந்து வந்ததாக காவல்துறை தெரிவித்தது.

இந்த தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கிறிஸ்ட்சர்ச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடிக்க உதவுமாறு பொலிஸார் வெள்ளிக்கிழமை இரவு வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் 31 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று காலை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அவர் இன்று கிறிஸ்ட்சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

இதனிடையே சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களைக் கொண்டவர்கள் எவரும் காவல்துறையை 105 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.