இந்தியா: தமிழ்நாடு

அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்ட அதிமுக சார்பில் கோவை காளப்பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி பேசியதாவது..

சாதாரண தொண்டன் கூட உச்சப்பட்ச பதவியை அதிமுகவில் மட்டுமே அடைய முடியும். வேறு எந்த கட்சியிலும் முடியாது.

தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்ந்தார்கள். திமுக ஆட்சி மக்கள் மக்கள் விரோத ஆட்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும். பொம்மை முதல்வராக மு‌.க.ஸ்டாலின் உள்ளார். அதிமுகவினர் மீது வழக்கு போடுவதை தவிர மு.க.ஸ்டாலின் வேறு எதுவும் செய்ய வில்லை.

கோவை மாவட்டத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் இந்த அரசு கொண்டு வரவில்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும்.

இப்போது இருந்தே தேர்தல் பணியை ஆரம்பிக்க வேண்டும்‌. அதிமுகதான் மக்கள் மீது அக்கறை கொண்ட கட்சி. இனி எந்த தேர்தல் வந்தாலும் நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.