ஆக்லாந்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மார்ச் 15 அன்று Epsom என்ற இடத்தில் உள்ள ஒரு முகவரியில் அட்ரியன் செல்வின் என்ற 39 வயதுடைய நபர் ஒருவர் இறந்து கிடந்தார்.

இதனையடுத்து ஆக்லாந்து முழுவதும் பல முகவரிகளில் தேடுதல் வாரண்டுகள் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் 24, 28 மற்றும் 29 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவர்கள் மீது கொலை, மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும், சப்ளை செய்ததாக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

அவர்களில் ஒருவர் மீது துப்பாக்கி வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

கைது செய்யப்பட்ட மூவரும் இன்று ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.