இன்று காலை Palmerston North பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

முன்னதாக சந்தேகத்திற்கிடமான ஒரு பொருள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து Rangitikei தெருவில் உள்ள ஒரு முகவரிக்கு அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகிலுள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு சாலை மூடப்பட்டது என்று பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்தது ஒரு மனிதனின் சடலம் என்பதை பொலிஸார் உறுதிபடுத்தினர்.

இதனையடுத்து இந்த மரணம் தொடர்பில் மரணம் பிரேத பரிசோதனையாளருக்கு பரிந்துரைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

மூடப்பட்ட சாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.