இன்று காலை Waikato வில் உள்ள இரண்டு வணிக நிலையங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் 13 வயது சிறுவன் உட்பட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலை 8.45 மணியளவில் Hillcrest தெருவில் உள்ள Tirau சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஆயுதம் ஏந்திய மூன்று பேர் நுழைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்கள் ஊழியர்களை பணம் மற்றும் சிகரெட்டுகள் கேட்டு அச்சுறுத்தினர், பின்னர் திருடப்பட்ட வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றதாக ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பின்னர் Te Poi இல் உள்ள மாநில நெடுஞ்சாலை 29 இல் ஒரு கடையில் குறித்த வாகனம் நிறுத்தப்பட்டது. வாகனத்தில் இருந்து இரண்டு பேர் வெளியே வந்து கடையில் இருந்த பொருட்களைத் திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து திருடப்பட்ட வாகனம் Matamata வில் மீட்கப்பட்டது.

மேலும் 16 வயதுடைய மூன்று இளைஞர்களையும் 13 வயது சிறுவன் ஒருவனையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.