Southland இல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை இரவு 11 மணியளவில் Tuatapere என்ற இடத்தில் உள்ள Half Mile சாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது என்று டிடெக்டிவ் மூத்த சார்ஜென்ட் கிரெக் பேர்ட் கூறினார்.

ஆயுதம் ஏந்திய குற்றவாளிகள் அணியினரின் உதவியுடன் தேடுதல்களை மேற்கொண்ட பொலிசார் இருவரை கைது செய்தனர்.

மேலும் அந்த இடங்களில் இருந்து கஞ்சா மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்கள் மீது பொறுப்பற்ற முறையில் துப்பாக்கி ஏந்தியதாக குற்றம் சாட்டப்பட்டது என அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 25 வயது இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் Invercargill மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும் 20 வயது இளைஞன் ஒருவர் இன்று Invercargill மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

விசாரணைகள் நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.