நடிகை ராஷ்மிகா தினமும் தனது வீட்டு உதவியாளரின் கால்களைத் தொட்டு வணங்குவதாகவும் மக்களிடையே பாகுபாடு காட்ட விரும்பவில்லை என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறி உள்ளார்.

இதுகுறித்து ராஷ்மிகா கூறியதாவது...

சிறிய விடயங்கள் எனக்கு முக்கியம். நான் எழுந்ததும் என் செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிடுகிறேன், என் நண்பர்களைச் சந்திப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை, அவை ஒரு நபரை உருவாக்கவோ அல்லது கொல்லவோ முடியும், அதனால்தான் யாராவது ஏதாவது சொன்னால், அது முக்கியமானதாக நான் நினைக்கிறேன். நான் என் டைரியில் மிகச்சிறிய விவரங்களை பதிவு செய்து வருகிறேன். வீட்டிற்கு வந்தால் நான் அனைவரின் பாதங்களையும் மரியாதையுடன் தொட்டு வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

நான் எங்கள் வீட்டு உதவியாளர்களின் கால்களைத் தொட்டு வணக்குகிறேன். ஏனென்றால் நான் யாரையும் வேறுபடுத்த விரும்பவில்லை. நான் அனைவரையும் மதிக்கிறேன் என கூறி உள்ளார்.