இந்தியா: தமிழ்நாடு

பிரபல நடிகர் அஜீத்குமாரின் தந்தை உடல் நலக்குறைவினால் காலமானார்.

அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஜீத் தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தந்தையை இழந்து வாடும் அஜித் அவர்களுக்கு இதனை தாங்கிக்கொள்ளும் மனவலிமையையும், தைரியத்தையும் வழங்க வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன் என்று அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை, வி.கே. சசிகலா ஆகியோர் அஜீத் தந்தை மறைவுக்கு தங்களின் ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை பதிவிட்டு அஜீத் குமாருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்' என மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்,தந்தையை இழந்து வாடும் திரு.அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியன் அவர்கள் காலமானதை அறிந்து வருத்தமடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன் என்று அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி! என்று பதிவிட்டுள்ளார்.

பிரபல நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை பாலசுப்ரமணியம் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தந்தையின் மறைவு அஜித் அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.தனது தந்தையை இழந்து இருக்கும் இந்த கடினமான நேரத்தில் அன்பு சகோதரர் அஜித் அவர்களுக்கு இதனை தாங்கிக்கொள்ளும் மனவலிமையையும், தைரியத்தையும் வழங்க வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.