பொது மக்களுக்கான சேவைகள் , குறைந்த மட்டத்தில் காணப்படும்  40 அரச நிறுவனங்களை   மூடுவது குறித்தே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார் . 

சில அரச நிறுவனங்களில் தலைவர்கள் மட்டுமே காணப்படுகின்றனர் . அத்துடன்  நிறுவனங்கள் பல ஒரே விதமான செயற்பாடுகளையே மேற்கொள்வதாலும் இந்த தீர்மானம் எடுக்க பட்டுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். 

செலவுகளை முகாமைத்துவம் செய்தல், வினைத்திறனை அதிகரித்தல் ஆகிய இலக்குகளை  இதனூடாக அடைய எதிர்பார்த்துள்ளதாகவும் , இவ்வாறான நிறுவனங்களை மறுசீரமைக்கும் போது, அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாதிருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.