கொழும்பு மாவட்டத்தில் சில தொடர்மாடிக் குடியிருப்புக்கள் டிசெம்பர் 6 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் முடக்கப்பட்ட நிலையில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

 

இதன்படி நவம்பர் 23 ஆம் திகதியிலிருந்து இரண்டு வாரங்களுக்கு இந்தத் தொடர்மாடிக் குடியிருப்புக்களை முடக்கிவைத்திருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொழும்பு செயலகப் பிரிவில் ஐந்து தொடர்மாடி வீட்டுத் தொகுதிகளும், திம்பிரிகசாயா பிரிவில் மூன்று வீட்டுத் தொகுதிகளும், மொரட்டுவவில் ஒரு வீடமைப்புத் தொகுதியும் முடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்தப் பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்படும் நிலையிலேயே முடக்கல் காலம் நீடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.