Christchurch இல் நேற்றைய தினம் இரவு ஒரு வீட்டில் அத்துமீறி நுழைய முயற்சித்த இரண்டு மர்ம நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இரண்டாவது நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் Linwood என்ற இடத்தில் Hanmer தெருவில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் இரண்டு மர்ம நபர்கள் நுழைந்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு இன்று Christchurch மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் இரண்டாவது நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் நடந்து வருகின்றன என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.