முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 35 லட்சம் ரூபா பெறுமதியான கள்ள நோட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

விஷேட அதிரடிப்படையினர் நேற்று (09) அவரை  கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விநாயகர் வீதி தேவிபுரம் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரே அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 5000 ரூபா கள்ள நோட்டுகள்  700 உம்,  பிரிண்டர் ஒன்றும் கைப்பற்றப் பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.