கொழும்பு அங்கொடை ஆதார வைத்தியசாலையில் (I.D.H) கடமையாற்றிவரும் தாதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இருப்பினும் குறித்த I.D.H வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களிடமிருந்து அவருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

 

அதனையடுத்து , அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் ,இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பல நோயாளிகள் I.D.H வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.