அனுராதபுரத்தில் நடைபெறவிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது முதலாவது தேர்தல் பேரணியை இன்று அனுராதபுரத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தது.

எனினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் நிச்சயமற்ற தன்மை காரணமாக, இந்த பேரணி மார்ச் நடுப்பகுதிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.