கிஸ்போர்னில் தண்ணீர் சுத்திகரிப்பு முறை தோல்வியடைந்துள்ளதால், நகர மக்கள் உடனடியாக தண்ணீரைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கிஸ்போர்ன் மாவட்ட கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.

கவுன்சில் மேலாளர் ஸ்காட்டி ஷார்ப், மறு அறிவிப்பு வரும் வரை கிஸ்போர்ன் நகரில் தண்ணீரைப் பயன்படுத்துவதை மக்கள் நிறுத்த வேண்டும் என்றார்.

அது ஏன் தோல்வியடைந்தது என்று அவர்களுக்கு நிச்சயமாக கூறமுடியவில்லை.

கவுன்சிலின் தலைமை நிர்வாகி நெடின் தாட்சர் ஸ்வான் கூறுகையில்...

கடற்படைக் கப்பலான HMNZS Manawanui இன்று காலை கிஸ்போர்ன் துறைமுகத்தை வந்தடைந்தது.

போத்தல்களில் அடைக்கப்பட்ட நீர் மற்றும் கப்பலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தண்ணீரை நிரப்பக்கூடிய வெற்று கொள்கலன்கள் அந்த கப்பலில் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆனால் கடற்படை நிறைய தண்ணீரைக் கொண்டு வந்திருந்தாலும், அது விநியோகிக்கும் தண்ணீர் பெரும்பாலும் குடிப்பதற்காகவே இருக்கும் என்றும் கூறினார்.

நகரத்திற்கான தண்ணீரை உற்பத்தி செய்யும் நகரின் நீர் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளதாகவும், பழுது பார்ப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என தெரியவில்லை என்றும் Tairāwhiti குடிமைத் தற்காப்பு அவசர மேலாண்மை தெரிவித்துள்ளது.

மக்கள் பீதியடைய வேண்டாம், பாட்டில் தண்ணீரை வாங்க வேண்டும், என தாட்சர் ஸ்வான் தெரிவித்தார்.

இந்நிலையில் கிஸ்போர்னில் இருக்கும் நீதி மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் கிரி ஆலன், இது ஒரு அவசர நிலை என்றும், மக்கள் விழிப்புடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் கூறினார்.

இப்போது நாங்கள் இரண்டு மணிநேரம் கேட்கிறோம், தயவு செய்து அந்த தண்ணீரைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள், மேலும் தகவலை வழங்குவதற்கு இரண்டு மணிநேரத்தில் நாங்கள் மறுபரிசீலனை செய்வோம் என அவர் தெரிவித்தார்.

கிஸ்போர்ன் நீர் விநியோகம் இன்று மீண்டும் இயங்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

Tairāwhiti அவசரநிலை மேலாண்மை குழுவின் கட்டுப்பாட்டாளர் பென் கிரீன் கூறுகையில், கிஸ்போர்ன் மருத்துவமனையில் அவசரகால நீர் விநியோகம் உள்ளது மற்றும் நகரத்தில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் சில பாட்டில் தண்ணீர் உள்ளன என தெரிவித்தார்.