கடந்த மாதம் ஆக்லாந்தின் North Shore இல் நடந்த ஒரு மோசமான கொள்ளை தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜனவரி 7 ஆம் திகதி அதிகாலை Northcote இல் உள்ள Onewa சாலையில் நடந்த இச் சம்பவம் குறித்து Waitematā சிஐபி விசாரணை மேற்கொண்டு வந்தது.

இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பில் 20, 24 மற்றும் 25 வயதுடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் மோசமான கொள்ளை மற்றும் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார்கள் என்று துப்பறியும் மூத்த சார்ஜென்ட் நிக் போலண்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதிமன்றங்களில் முன் நிறுத்த எங்கள் புலனாய்வுக் குழு கடுமையாக உழைத்து வருகிறது‌ என அவர் தெரிவித்தார்.

இந்த திகிலூட்டும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறை தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது, மேலும் இந்த கைதுகள் அவர்களுக்கு சில நம்பிக்கைகளை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்." என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் இன்று North Shore மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.