இன்று மதியம் ஆக்லாந்து நெடுஞ்சாலையில் பொலீஸ் வேனில் இருந்து மூன்று கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

தடுப்புக் கைதிகள் மூவரும் பிற்பகல் 2.40 மணியளவில்  Ellerslie-Panmure நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்து தப்பிச் சென்றதாகவும், வேன் வடக்கே Mt Eden சிறைச்சாலையை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள்  South-Eastern நெடுஞ்சாலையை நோக்கி கால்நடையாகத் தப்பிச் சென்றுள்ளனர், பின்னர் அங்கு ஒரு வாகனத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.

பொலிஸார் அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும், இவர்கள் தப்பிச் சென்றதை பார்த்தவர்கள் விரைவில் பொலிஸை தொடர்பு கொள்ளுமாறும் கண்காணிப்பாளர் ஷனன் கிரே கூறினார்.