கிறிஸ்ட்சர்ச்சில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டறியப்பட்டதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இதனையடுத்து அங்குள்ள வணிக நிலையங்கள் மற்றும் மற்றும் பரபரப்பான சாலை மூடப்பட்டது.

இன்று காலை 8 மணியளவில் Woolston என்ற இடத்தில் காணப்பட்ட இந்த சந்தேகத்திற்கிடமான பொதி குறித்து தங்களுக்கு தகவல் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பொலிஸார் Ensors சாலையில் இருந்து Hopkins தெரு வரையிலான Ferry சாலையை மூடிவிட்டு பரிசோதனையை மேற்கொண்டதுடன், அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டனர்.

பின்னர் பொலிசார் பொதி சந்தேகத்திற்குரியதாக இல்லை எனக் கருதி, சாலையை மீண்டும் திறந்தனர்.

குறைந்தது நான்கு ரோந்து வாகனங்கள் சம்பவ இடத்தில் இருந்தன.