200க்கும் மேற்பட்ட மரங்களில் விஷம் கலந்ததைத் தொடர்ந்து, Southland ஐ சேர்ந்தஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

54 வயதான Tuatapere என்ற இடத்தில் உள்ள குடியிருப்பாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Tuatapere பொதுவெளியில் அழகுபடுத்தும் வகையில் இந்த மரங்கள் நடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Tuatapere சமூக வாரியத் தலைவர் Anne Horrell கூறுகையில்..

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நகரத்தில் ஒரு தோட்டத்தில் உள்ள கவுன்சில் நிலத்தில் 270 பைன் மரங்களில் பெரும்பாலானவை மஞ்சள் நிறத்தில் காணப்பட்டதாகவும் பின்னர் இறந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்ட நபரிடம் நேர்காணல் நடத்தப்பட்டபோது, ​​அவர் மரங்களில் விஷம் கலந்ததை ஒப்புக்கொண்டார்.

அந்த நபர் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி இன்வர்கார்கில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என பொலிஸார் தெரிவித்தனர்.