ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம் ஜனவரி 25-ம் திகதி வெளியானது.

இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.

பதான் படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியானதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தது. தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து பேஷாரம் ரங் பாடலில் தோன்றியது கடும் சர்ச்சைக்கு உள்ளானது. பதான் படத்திற்கு வலது சாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தின.

இந்நிலையில், இந்தியாவில் மட்டும் இப்படத்தின் மொத்த வசூல் கிட்டத்தட்ட 419 கோடி என கூறப்படுகிறது.

பதான் படத்தில் இடம்பெற்றுள்ள 'பேஷாரம் ரங்' பாடல் சர்ச்சையில் சிக்கி பல விமர்சனங்களை சந்தித்தபோது பதான் பாடலுக்கு எதிரான கருத்துகளுக்கு பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மாத்ருபூமி சர்வதேச விழாவில் கலந்துக் கொண்ட பிரகாஷ் ராஜ், பதான் படம் குறித்து பேசினார்...

அப்போது அவர் கூறுகையில்...

பதான் திரைப்படத்தை தடை செய்யவும் புறக்கணிக்கவும் அழைப்பு விடுத்தவர்கள் சும்மா குரைப்பவர்கள்..கடிக்கமாட்டார்கள்.. அவர்கள் பதான் திரைப்படத்தை தடை செய்ய விரும்பினர். ஆனால் படம் 700 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது. இந்த முட்டாள்கள், மதவெறியர்கள். பதானை தடை செய்ய நினைத்தவர்கள், மோடியின் (பி.எம் நரேந்திர மோடி) படத்தை 30 கோடி ரூபாய் வசூலிக்கும் அளவுக்கு கூட பார்க்கவில்லை.

எல்லோருக்கும் தெரிந்ததுபோல்.அவர்கள் குரைக்கிறவர்கள், கடிக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.