இந்தியா: தமிழ்நாடு

மதுரையில் இன்று அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவுக்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உதவித்தொகையை வழங்க உள்ளார்.

இந்நிலையில் மதுரை வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

குறிப்பாக நீட் தேர்வு இரத்து இரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவாரா அல்லது கல்வி கடன் ரத்து என்று அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி பற்றிய மகிழ்ச்சியான தகவலை வெளியிடுவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல், கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருப்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் ஏதேனும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடுவதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? ஒரு செங்கலை காட்டி எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பேசினாரே, அதனை நினைவு கூர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான நடவடிக்கைகளில் அவரின் பங்களிப்பை மக்களிடத்தில் விளக்கி சொல்ல முன்வருவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை வரும் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ள நலத்திட்ட நிகழ்ச்சிக்காக மிகப் பிரம்மாண்ட அளவிலான ஏற்பாடு செய்யப்பட்டு வருவது மக்களை முகம் சுளிக்க வைக்கும் அளவில் நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளிப்பாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.