உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் அமெரிக்காவும், மூன்றாம் இடத்தில் சீனாவும் உள்ளது.
சீனா பால் உற்பத்திக்காக பெரும்பாலும் வெளிநாடு மாடு இனங்களையே நம்பியுள்ளது.
கிட்டத்தட்ட 70 சதவீதம் கறவை மாடுகள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.
வெளிநாட்டு மாட்டு இனங்களை சார்ந்து இருப்பதற்கு மாற்றாக சீனா மாற்று வழியை நீண்ட காலமாகவே யோசித்து வந்தது.
இந்நிலையில் குளோனிங் முறையில் புதிய வகை கறவை மாடுகளை சீனா உருவாக்கியுள்ளது.
'சூப்பர் கவ்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த மாடுகளை சீனாவின் வடமேற்கில் உள்ள விவசாயத்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.
கடந்த 23 ஆம் திகதி சீனாவின் நின்கிக்சியா மாகாணத்தில் குளோனிங்கில் 3 கன்றுக் குட்டிகள் உருவாக்கப்பட்டதாக சீன ஊடகங்கள் கூறுகின்றன.
குளோனிங் முறையில் புதிதாக 3 கன்று குட்டிகளை உருவாக்கும் திட்டத்தின் முதன்மை விஞ்ஞானி ஜின் யாபிங்க் கூறுகையில்...
இது மிகப்பெரும் திருப்பு முனையாகும். அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் சூப்பர் கவ்ஸ்களின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
கறவை மாடுகளை வெளிநாடுகளை சார்ந்து இருப்பதை தவிர்ப்பதற்கான அடித்தளம் இது. குளோனிங் செய்யப்பட்டு பிறந்த கன்றுகள் 56.7 கிலோ எடை கொண்டதாகவும் 76 செ.மீட்டர் உயரம் கொண்டதாகவும் இருந்தது என்றார்.
இந்த கறவை மாடுகள் அதிக பால் உற்பத்திக்கு பெயர் போன ''Dutch Holstein Friesian breed' இனத்தில் இருந்து குளோனிங் செய்யப்பட்டது. சூப்பர்கவ்ஸ்கள் தனது வாழ்நாளில் 100 டன்கள் கொள்ளளவு எடை அளவுக்கு பால் வழங்கும் என்று சொல்லப்படுகிறது.