தெற்கு ஆக்லாந்தில் உள்ள Tōtara  பூங்காவில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து குற்றவாளியை பொலிஸார் தேடி வருகின்றனர்.

காலை 11 மணியளவில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

சம்பவ இடத்தில், ஒருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டிருந்ததாக தெரிவித்தனர்.

பொலிஸார் அப்பகுதியில் குற்றவாளியை தேடும் போது, ​ அருகில் இருந்த தாவரவியல் பூங்கா உட்பட அப்பகுதியில் அதிக பொலீஸ் பிரசன்னம் இருந்தது.

Tōtara பூங்கா மற்றும் அருகில் இருந்த தாவரவியல் பூங்காவைச் சுற்றி ஒரு சுற்றிவளைப்பு இருந்தது.

விசாரணை நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.