ஆக்லாந்து Dairy Shop கொள்ளை சம்பவத்தில் ஜனக் படேல் என்ற நபர் கத்தியால் குத்தி கொள்ளப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர்.

கடந்த நவம்பர் 23 ஆம் திகதி அன்று Sandringham இல் உள்ள குறித்த Dairy Shop இல் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் பட்டேல் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார்.

இது தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரில் ஹென்றி ஃப்ரெட் மற்றும் ஷேன் ஹென்றி டேன் ஆகியோர் கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

மேலும் 34 வயதுடைய மூன்றாவது நபர் மீது கொலை மற்றும் மோசமான கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

அவரது பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை.

இவர்கள் மூவரும் இன்று காலை ஆக்லாந்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்நிலையில் மூன்று பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர்.

இதனிடையே 2024 ஆம் ஆண்டு குறித்த வழக்கு விசாரணைக்கு வரும் வரையில் அவர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.