உத்தர பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

திருமணம் நடைபெறுவதற்கு முன் மணமக்கள் மாலை மாற்றி கொள்ளும் நிகழ்ச்சிக்கு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, மணமகன் வரவேற்பு நடந்தது. இதற்காக மணமகன் ஊர்வலம் நடத்தப்பட்டது. இதன்பின்பு அழைத்து வரப்பட்ட மணமகன், அவரது உறவினர்கள் மணப்பந்தலுக்கு சென்றனர். இந்நிலையில், மணமகளையும் உறவினர்கள் மணப்பந்தலுக்கு அழைத்து வந்துள்ளனர்.

மேடையில், மணமகனை பார்த்த மணமகள் அவரை திருமணம் செய்யமாட்டேன் என கூறி விட்டு மேடையை விட்டு உடனடியாக இறங்கி வீட்டுக்கு சென்று விட்டார். மேலும்‌ தனக்கு கருப்பு நிற மணமகன் வேண்டாம் என கூறியுள்ளார்.

மணமகள் அதுவரை மாப்பிள்ளையை பார்க்கவில்லை எனத் தெரிகிறது. உறவினர்கள் சமாதானம் செய்ய எவ்வளவு முயற்சித்தும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அதனையடுத்து புகாரின் அடிப்படையில், மணமகள் உள்பட முக்கிய பிரமுகர்களை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், மணமகள் தனது முடிவில் மாறாமல் இருந்ததால் திருமணம் நின்றது.