நியூசிலாந்தின் ரக்பி அணியான பிளாக் ஃபெர்ன்ஸ் அணியின் உலகக் கோப்பை வெற்றியை கொண்டாடும் நிகழ்வு இன்று வெலிங்டனில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதமர் ஜசிந்தா ஆடர்ன் மற்றும்  பலர் கலந்துகொண்டனர்.

பிளாக் ஃபெர்ன்ஸ் அணியின் நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் தங்கள் ஹீரோக்களை இன்று சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

பிரதமர் ஆர்டெர்ன் இந்த வெற்றிவிழாவை கொண்டாட வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மக்கள் மற்றும் எம்.பி.க்கள் சார்பாக, பிரதமர் ஆடர்ன் அணியினரின் முயற்சிகளுக்காகவும் "எங்கள் தேசிய விளையாட்டை அனைவரின் விளையாட்டாக மாற்றியதற்காகவும்" நன்றி தெரிவித்தார்.

"வரலாற்றை மாற்றியதற்கு நன்றி, பெண்களால் எதையும் செய்ய முடியும் என்பதைக் காட்டியதற்கு நன்றி.

 "உலக சாம்பியனானதற்கு நன்றி" என பிரதமர் ஆடர்ன் மேலும் தெரிவித்தார்.