பிக் பாஸ் 6 வீட்டில் இருப்பவர்கள் பிரபல சினிமா கதாபாத்திரங்களின் கெட்டப்புகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தான் பிரமாண்ட கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

இன்று வெளியாகியிருக்கும் முதல் ப்ரொமோ வீடியோவில் கலை நிகழ்ச்சி குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அதில் கதிரவன் கூறியிருப்பதாவது, ட்விங்கிள் ட்விங்கிள் பெரிய ஸ்டார். நீங்களும் ஆகலாம் மக்களின் ஸ்டார். நடக்கவிருக்கும் பிரமாண்ட கலை நிகழ்ச்சிக்கு ஆடிஷன்ஸ் சிறப்பாக நடத்தி சிறந்த கலைஞர்கள் 5 பேரை தேர்வு செய்ய வேண்டும்.

அந்த 5 பேர் மட்டுமே நடக்கவிருக்கும் பிரமாண்ட கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்றார்.

கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆசையில் ஹவுஸ்மேட்ஸ் தாங்கள் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் ஆடிஷனில் காட்டி வருகிறார்கள்.

நடுவர்களில் ஒருவராக இருக்கும் விக்ரமனோ, மேடைக்கு வந்த வழக்கறிஞர் கெட்டப்பில் இருக்கும் அசீமிடம் ஒரு சிட்ச்சுவேஷனை தெரிவித்தார்.

சீரியஸான கேஸ். அதை மிஸ் செய்தீர்கள் என்றால் அவருக்கு தூக்கு. அங்கு லாஃபிங் கேஸை திறந்துவிட்டுவிட்டார்கள் என்றார்.

விக்ரமன் கூறியதை கேட்ட அசீமோ, அப்போ அந்த கொலையில உன் கைரேகை இருந்துச்சே அதை பத்தி என்ன சொல்ற என சிரித்துக் கொண்டே நடித்துக் காட்டினார்.

அசீமின் நடிப்பை பார்த்து இம்பிரஸ் ஆன மற்றொரு நடுவரான ஏ.டி.கே., நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள் என்று அறிவித்தார்.

ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது...

அசீமின் நடிப்பு வேற லெவல். கலைஞன் டா. ஆமாம், ஆயிஷாவின் டான்ஸ் பெர்ஃபாமன்ஸ் ஏன் எபிசோடில் வரவில்லை. இது அநியாயம். அவர் எஸ்டிஆர் கெட்டப்பில் செமயாக நடித்தார். இந்த வாரம் ஆயிஷா தான் வெளியே போகிறாரா? ஆயிஷாவின் பெர்ஃபாமன்ஸை காட்டவில்லை என்றால் அவரின் திறமை பற்றி பார்வையாளர்களுக்கு எப்படி தெரியும். அவர்கள் எப்படி ஓட்டு போடுவார்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

வீட்டில் இருக்கும் பெண்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு ஆண்களை மட்டும் வைத்து ஷோ நடத்துவது தான் பிக் பாஸின் திட்டம் போன்று.

வேண்டும் என்றே ஆயிஷாவை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கார்னர் செய்வது போன்று இருக்கிறது.

நன்றாக விளையாடும் ஆயிஷாவை வெளியேற்றுவதில் ஏன் குறியாக இருக்கிறார்கள் என பிக் பாஸ் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.