ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியான Takanini இல் அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை செய்ததை அடுத்து வாகனத்தை நிறுத்தாது சென்ற குறித்த ஓட்டுநர் மற்றொரு வாகனத்தின் மீது மோதி உயிரிழந்தார்.

நேற்று இரவு சுமார் 11.50 மணியளவில் தெற்கு ஆக்லாந்தில் உள்ள Takanini பள்ளி சாலையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஓட்டுநர் நிறுத்தாமல் சென்றதுடன் Takanini வடக்கு நோக்கிச் செல்லும் மோட்டார் பாதையில் உள்ள குறுக்குவெட்டில் ஒரு வாகனத்தில் மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதில் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றும் 3 பேர் பலத்த காயங்களுடன் மிடில்மோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இது போன்ற நிகழ்வுகள் எப்போதுமே பேரழிவை ஏற்படுத்துவதாகவும், காவல்துறையின் சமிக்ஞைக்கு வாகனத்தை நிறுத்தாமல் செல்வது உயிர்களை ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் கவுண்டிஸ் மானுகாவ் மாவட்ட கமாண்டர் இன்ஸ்பெக்டர் மாட் ஸ்ரோஜ் கூறினார்.

தீவிர விபத்துப் பிரிவு சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் இந்த விவகாரம் குறித்து சுயாதீன பொலிஸ் நடத்தை ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.